வியாழன், 14 நவம்பர், 2024

நெகிழியின் கண்ணீர்

நெகிழியின் கண்ணீர்

 ஆக்கம் : இரா. கலைச் செல்வி


நான் ஏன் பிறந்தேன்..??
நானாக பிறக்கவில்லை..!! 
நான்  மனிதர்களின் வசதிக்காக ,
பிறக்க வைக்கப்பட்டேன்.


நான் விரும்பாவிட்டாலும்...
நம் மக்கள் விரும்புவதால்,
நாளும் பெருகுகிறேன் நான்.


மக்க  முடியாத என்னை...
மண்ணில் புதைத்து ...
மண்ணை மலடாக்குகிறார்கள் .
மனிதர்கள்...நான் என்ன செய்வேன்...!!

என்னை குப்பையில் எறிவதால்...
வாயில்லா ஜீவன்களின்
வயிற்றுக்குள் போகிறேன் நான்.

கால்நடை இறப்புக்கும் ,
சாக்கடை அடைப்பிற்கும் ,
நானே காரணமாகிறேன்.
நான் என்ன செய்வேன்..!!

என் பிறப்பை தடுக்க...
என்னை ஒழிக்க...அழிக்க
எத்தனை அரசாணைகள்..??

ஒரு பயனும் இல்லை.
ஓயாத ஆணைகளால்.

என்னை பைகள் ஆக்கினர்.
என்னை பூக்கள் ஆக்கினர்.
என்னை சாப்பிடும் இலையாக்கினர்.
என்னை டீ  குவளையாகவும் ஆக்கினர்.

என் மீது  சூடு பட்டால்
உருகிக் தான் போவேன்.
என்னை எரித்தால் 
டயக்சின்  விஷத்தை கக்குவேன்.

நான் என்ன செய்ய..!! என்
நல் இயல்பு அது...!!!

உருகுவேன் எனதெரிந்தும் ,
உருக்கி காப்பி கப் உருவாக்கி,
காப்பி குடிக்க உபயோகம் செய்யும்
கற்ற  மனிதர்களை..
நான் என்ன செய்ய முடியும்..??

என்னால் நிலம் மாசுபடுகிறது.
என் பூமித்தாய் மலடாகிறாள்.

நீர்வளம் கெடுகிறது.
நிலவளம் கெடுகிறது.

நான் என்ன செய்ய..!!
நானாக பிறக்கவில்லை.
நான் பிறக்க வைக்கப்பட்டேன்.

வாசலில் நெகிழி பூக்கள்.
வந்து அமர்ந்த பட்டம் பூச்சி
வாசம் இன்றி ,ஏமாந்து போனது.

ஏமாற்றுவது என் இயல்பு இல்லை.
ஏமாற்றுவதும் ,ஏமாந்து போவதும்
மனிதர்களின் இயல்பு.

நான் என்ன செய்வேன்..!!
நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்.


ஆக்கம்: இரா. கலைச்செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ருத்ர தாண்டவம்

சிறுகதை   #ருத்ர தாண்டவம் # : படைப்பு:இரா. கலைச்செல்வி                  —-------- (இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடு...