#சுதந்திர காற்று # (கலையின் ஹைக்கூ கவிதைகள்)
படைப்பு கவிஞர் இரா .கலைச்செல்வி
#எனது உயிர் மூச்சாய்....
சுதந்திர காற்று .
சுகமாய் சுவாசிக்கிறேன்.
#சிறகு முளைத்த பறவை .
எல்லைகளற்ற வானம்.
விடுதலை காற்றில் பறப்பதை
யாராலும் தடுக்க முடியாது.
#மூச்சைவிட்ட தியாகிகளின்
சுவாசம் நின்று போனது ..! எதனால்.?
விடுதலை காற்று கிடைக்காததால் .
#மூவர்ணம் தாங்கி ,
தியாகம், அமைதி, செழிப்பு ஓங்கி ,
அசோகச் சக்கரத்தில் சுழன்று ,
விடுதலைக் காற்று
சுதந்திர தேவியாய் பவனி வருகிறாள்.
#பல நூற்றாண்டாய் ...
பாரம் சுமக்கிறாள் பெண்.
நாடு விடுதலை பெற்றது தெரியாமல் .
#ஆண்டாண்டு காலமாய் பெண்ணை ...
அடக்கி ஆள்கிறான் ஆண் .
நம் நாட்டு மக்கள் சுதந்திரம்
பெற்று விட்டதை மறந்து.
#சுதந்திரத்தைப் பற்றி..
மாணவனை இரண்டு நிமிடங்கள்
பேசச் சொல்கிறார் ஆசிரியர்.
கையில் பிரம்புடன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக