புதன், 25 பிப்ரவரி, 2026

ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்

#ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்#


​            மாலை  அஞ்சு மணி இருக்கும். லலிதா மாமி மாடிப் போர்ஷனிலே ஒரே ஆர்ப்பாட்டம்..

​         மாமி,  மாதுவைப் பார்த்து, “ ஏண்டி இன்னிக்கு காலேஜ் லீவ்-னா, கொஞ்சமாவது ஆத்திலே எனக்கு ஒத்தாசை பண்ணப் படாதா?”ன்னு  கத்தினாள். அச்சமயம் பார்த்து, சுந்தரம் மாமா  கூப்பிட்டார், “ஏண்டிமா! லலிதா இங்க வா, ஆத்துக்கு யாரோ வந்திருக்கா போல இருக்கு!”

​          மாமி,  எட்டி பார்த்தாள்.  வாசல்லே  ஒரு ஆசாமி...கூட ஒரு  மாமி.

​          எழுந்து வந்த சுந்தரம் மாமா, “ இவா தான் நம்ம  கணேஷ் அய்யர் சொன்னவா.”

​          மாமிக்கு ‘பகீர்’ன்னு ஆயிடுத்து. “அடடா! ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லக் கூடாதா?  ஆத்திலே பால்கூட  இல்லையே! ” 

​​          “வாங்கோ, வாங்கோ! உள்ளே வாங்கோ!”

           “இல்ல. நாங்க  வந்து​.....” கூறுவதற்குள்.   “எல்லாம் தெரியும். வாங்கோ.  மாது ஆத்துல தான் இருக்கா.”

​​           மாமி, மெதுவா ஹாலுக்கு வந்து, “மாது, நன்னாவே  பாடுவா.  பையன் வரலையோ . மாது நீ அந்தச் பாட்டை பாடிக்காட்டிண்டே இரு, நான் வந்துடுறேன்!”ன்னு சொல்லி, பக்கத்து வீட்டிற்கு பால் வாங்க சென்றாள்.  

           வந்தவாளுக்கு மாமியோட பாவனையும், மாதுவோட பாட்டும் ஒண்ணும் புரியலை. “

          அய்யர்வாள்  நாங்க இன்னும் நிறைய வீட்டுக்கு போகணும் எனக்கூறி ,நன்கொடை வசூல்  புத்தகத்தை  நீட்டியவுடன் , சுந்தரம்   மாமா திடுக்கிட்டார்.

          “நீங்க… மாதுவை பெண் பார்க்க வரலையோ.”

முற்றும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்

#ஆத்துக்குள்ளே ஒரு ஆட்டம்# ​ ​            மாலை  அஞ்சு மணி இருக்கும். லலிதா மாமி மாடிப் போர்ஷனிலே ஒரே ஆர்ப்பாட்டம்.. ​         மா...