சனி, 14 டிசம்பர், 2024

கல்லுப் பிள்ளையார்

🙏🏻 *கல்லுப் பிள்ளையார்*🙏🏻


கவிதை: 



கவிஞர் இரா. கலைச்செல்வி


போராளி சுப்புவின்..

 திடீர் மரண செய்தி...!!!


 காட்டுத்தீயாய்...!!!

 கந்துப்பட்டி முழுவதும்

காற்றாக  பரவியது.


அனுதாப அலைகள் எங்கும்...!!!

 ஆயிரக்கணக்கில் இரங்கல் செய்திகள்...


சுப்புவின் இளம்  மனைவிக்கு ஆறுதல்.

 சுப்புவின் குடும்பத்தை,


 தத்தெடுத்துக் கொள்வதாக ...!!!

 தலைவரின் அறிவிப்பு.


சுப்புவின் சடலத்திற்கு ...

கட்சி தலைமையிடத்திலிருந்து...


ஆயிரம் மாலைகள்.

 அரசு மரியாதையுடன்

 அடக்கம் செய்யப்பட்டது சடலம்.


தத்தெடுத்த சுப்புவின் குடும்பத்திற்கு,

 தலைவர்களின் அணிவகுப்பு .


குடும்ப நலம் விசாரிக்க..!!!

குடும்பத்தின் தேவையினை அறிய...!!!


பிரம்மாண்டமாய்...!!!

 பத்திரிகைகளில் 

பாராட்டுக்கள்...இச்செய்தி குறித்து.


ஒரு மாதத்திற்குப் பின்

 ஒரு கோரிக்கை வைத்து 


உதவி கேட்டாள்  சுப்புவின் மனைவி .

உடனே நாளை வா...!! 


நல்லது சொல்கிறேன் என,

நவின்றார்...!!!

 அந்த  கட்சியின் எம்எல்ஏ.


மறுநாள் சென்றாள்.

 மாறுபட்டு பேசினார்.

 

இருப்புக் கொள்ளவில்லை.

 இவளுக்கு...!!!


தனது கோரிக்கை குறித்து  ,

 தாளாமல் அவசரப்பட்டாள்.


ஏன் அவசரப் படுற...

 கொஞ்சம் இரு ....!!


"எட்டி கையைப் பிடித்தான்.

ஒரு நமட்டு சிரிப்புடன்."



*சாக்கடைக்குள் மூழ்கிய பன்றி.!!!*

 சட்டென்று நினைவில் வந்தது.


சுட்டாள் கண்களால். 

சூடு தாங்காமல்....


 மறுவாரம் மாலை..!!

மகிழ்வோடு  வரச்சொன்னான்.


கனத்த மனத்தோடு நடந்தாள்.

 கணவரின் மரணமும்,

 கணவரின் சடலத்துக்கு

 கிடைத்த ...


மாலை மரியாதைகளும்,

 மனக்கண்முன் வந்து...

 மனசு  கனத்தது..!!


ஆறாத மனதுடன்....

ஆற்றங் கரையில் ,

அமர்ந்திருக்கும்....


கல்லுப் பிள்ளையாரை நோக்கி ....

கால்கள் நடந்தன..!!


கல்லுப் பிள்ளையாரிடம் 

கவலைகளை கொட்டி ...

தன்மனதை ஆற்றுப்படுத்திவிட்டு,


தன்னம்பிக்கையுடன் ,

தைரியமாய் நடந்தாள் ..!!

தன்னை மட்டுமே நம்பி, 

எதையும் எதிர்கொள்ள..!!


கவிஞர் இரா. கலைச்செல்வி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாடி என் வயிற்றுக்குள்ளே

சிறுகதை : #வாடி என் வயிற்றுக்குள்ளே..!! # எழுத்தாளர்: இரா.கலைச்செல்வி                       *****          அன்று வீடே  ஒரே பரபரப்பாய் இருந்த...