# நவீன திருக்குறள்#
(கலையின் பொன்மொழிகள்)
---
பிறரை சிரிக்கவை சிந்திக்கவை ஆனால் ,
பிறருக்கு சிரமத்தை வைக்காதே.
நம்மீது நமக்கு நம்பிக்கை இருக்கும்வரை ,
நம் வாழ்க்கை நம்வசமே .
நம் எண்ணங்கள் மின்காந்தசக்தி வாய்ந்தவை.
நல்லதே நினைத்து பழகு.
நிராகரிக்கப்பட்ட இடத்தில் கோபம் காட்டாதே .
சிரிப்பை காட்டு சிறந்தபதிலடி.
வலிகள் இல்லையெனில் வாழ்க்கை இல்லை .
முயற்சி இல்லையெனில் வெற்றியில்லை.
வாழ்க்கை போராட்டம் தான். அதனை,
இனிமையாக்குவதும் கடினமாக்குவதும் நாமே .
மனம் ஒரு தனிமனிதன். அதனை ,
அடக்கி ஆள்பவன்தான் மனிதன் .
முறையற்ற ஆசையை அடக்கு. இல்லாவிடில் ,
அது உன்னையே ஆளத்தொடங்கிவிடும் .
அடுத்தவர் பேசும் போது அவர்களை ,
முழுவதும் பேச அனுமதியுங்கள்.
தன்னம்பிக்கை உன்னுள் இருந்தால் நிச்சயம் ,
உன்வாழ்வில் அனைத்தும் சாத்தியமாகும்.
தினமும் அன்றாட வேலையை பட்டியலிடுங்கள்.
இரவுக்குள் செய்து முடியுங்கள்.
பட்டியலிட்ட வேலையை முடித்துப் பாருங்கள் .
மனதிற்குள் எத்துணை மகிழ்ச்சி .
ஊழியரின் உழைப்பை பாராட்ட தயங்காதிர்கள்.
அதுஅவர்களை மேலும் உழைக்கத்தூண்டும் .
எதற்கெடுத்தாலும் பிறறை குறை கூறாதீர்கள்.
உங்கள் குறையை ஆராயுங்கள்.
குறை கூறுவதை சற்று தள்ளி போடுங்கள்.
குறையே கூட நிவர்த்தி அடையலாம்.
கடமையை கடமைக்காக , ஒருபோதும் செய்யாதே.
கடமையை அன்போடு செய் .
ஒருவர் சிறுஉதவி செய்யினும் நன்றிசொல்.
மிகப்பெரிய உதவிகள் வந்தடையும் .
புகழ்வதை பலபேர் முன் பாராட்டுங்கள்.
குறைகளை தனியாக சுட்டிக்காட்டுங்கள் .
பசி வந்த பின் சாப்பிடு.
பசி தீரும்முன் எழுந்திரு .
சில சமயங்களில் சாதாரண விஷயங்கள்கூட,
சிலர் சொல்லும்போதுதான் புரியும்.
உங்களுக்காக வாழ்ந்த முதியோரை மதியுங்கள்.
உங்களுக்காக தன்னை இழந்தவர்கள்.
உறவினை இழந்த பிறகு வருந்தாதே.
இருக்கும் போதே அன்புகொள்.
உன் ஆழ்மனதினை அகலாய்வு செய் .
கீழடியைப்போல் தடையங்கள் கிட்டும்.
உன் கனவினை ஆழ்மனதில் பதித்துவிடு .
உரிய வழிகள் உடனே கிட்டும்.
உலகில் எதுவும் நிரந்தரமில்லாத நிலையில் ,
உன்துன்பம்மட்டும் எப்படி நிரந்தரமாகும்?
முற்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக