புதன், 26 மார்ச், 2025

நவீன திருக்குறள்


# நவீன திருக்குறள்#


(கலையின் பொன்மொழிகள்)


                         ---


பிறரை சிரிக்கவை சிந்திக்கவை ஆனால் ,

பிறருக்கு சிரமத்தை வைக்காதே.


நம்மீது  நமக்கு  நம்பிக்கை இருக்கும்வரை ,

நம்  வாழ்க்கை  நம்வசமே .


நம் எண்ணங்கள் மின்காந்தசக்தி வாய்ந்தவை.

நல்லதே   நினைத்து   பழகு.


நிராகரிக்கப்பட்ட இடத்தில் கோபம் காட்டாதே .

சிரிப்பை  காட்டு  சிறந்தபதிலடி.


வலிகள் இல்லையெனில் வாழ்க்கை இல்லை .

முயற்சி இல்லையெனில் வெற்றியில்லை.


வாழ்க்கை போராட்டம்   தான்.  அதனை,

இனிமையாக்குவதும் கடினமாக்குவதும் நாமே .


 மனம்   ஒரு  தனிமனிதன்.   அதனை  ,

அடக்கி  ஆள்பவன்தான்   மனிதன் .


முறையற்ற ஆசையை அடக்கு. இல்லாவிடில் ,

அது  உன்னையே  ஆளத்தொடங்கிவிடும் .


அடுத்தவர்   பேசும்  போது  அவர்களை ,

முழுவதும் பேச அனுமதியுங்கள்.


தன்னம்பிக்கை உன்னுள் இருந்தால் நிச்சயம் ,

உன்வாழ்வில் அனைத்தும் சாத்தியமாகும்.


தினமும் அன்றாட  வேலையை பட்டியலிடுங்கள்.

இரவுக்குள் செய்து முடியுங்கள். 


பட்டியலிட்ட வேலையை முடித்துப் பாருங்கள் .

மனதிற்குள் எத்துணை மகிழ்ச்சி  .


ஊழியரின் உழைப்பை பாராட்ட  தயங்காதிர்கள்.

அதுஅவர்களை  மேலும் உழைக்கத்தூண்டும் .


எதற்கெடுத்தாலும்  பிறறை குறை கூறாதீர்கள்.

உங்கள் குறையை ஆராயுங்கள். 


குறை கூறுவதை சற்று தள்ளி போடுங்கள்.

குறையே கூட நிவர்த்தி அடையலாம்.


கடமையை கடமைக்காக , ஒருபோதும் செய்யாதே.

கடமையை அன்போடு செய் .


ஒருவர்  சிறுஉதவி  செய்யினும்  நன்றிசொல்.

மிகப்பெரிய உதவிகள்  வந்தடையும் .


புகழ்வதை   பலபேர்   முன்  பாராட்டுங்கள்.

குறைகளை தனியாக சுட்டிக்காட்டுங்கள் .


பசி   வந்த   பின்  சாப்பிடு.

பசி தீரும்முன் எழுந்திரு .


சில  சமயங்களில்  சாதாரண விஷயங்கள்கூட,

சிலர் சொல்லும்போதுதான் புரியும்.


உங்களுக்காக வாழ்ந்த முதியோரை மதியுங்கள். 

உங்களுக்காக தன்னை இழந்தவர்கள்.


உறவினை இழந்த பிறகு  வருந்தாதே.

இருக்கும் போதே அன்புகொள்.


உன்   ஆழ்மனதினை அகலாய்வு   செய் .

கீழடியைப்போல் தடையங்கள்  கிட்டும்.


உன் கனவினை ஆழ்மனதில் பதித்துவிடு .

உரிய வழிகள் உடனே கிட்டும்.


உலகில் எதுவும் நிரந்தரமில்லாத  நிலையில் ,

உன்துன்பம்மட்டும்  எப்படி  நிரந்தரமாகும்?




              முற்றும்.



வாடி என் வயிற்றுக்குள்ளே

சிறுகதை : #வாடி என் வயிற்றுக்குள்ளே..!! # எழுத்தாளர்: இரா.கலைச்செல்வி                       *****          அன்று வீடே  ஒரே பரபரப்பாய் இருந்த...