வெள்ளி, 11 ஏப்ரல், 2025

தென்றலும் புயலுமானவள் பெண்



தென்றலும்  புயலுமானவள் பெண் ..!!



படைப்பு :கவிஞர் இரா.கலைச்செல்வி,


தென்றலாய் மனதை வருடியவள். 

அநீதி கண்டால் புயலாய்  சீறிபாய்வாள்.


அன்பின் ஊற்றாய் அனைவரையும் அரவணைப்பாள்..!!


அநியாயம் நடந்தால் சிங்கமென கர்ஜனை செய்வாள்.


 சாதனைகள் படைப்பதில் அவள் சளைத்தவளும் அல்ல..!!


 சவால்களை சந்திப்பதில் அவள்  தயங்கியவளும் அல்ல..!!


தன் கனவுகளை வென்றெடுப்பதில் உறுதியானவள்..!! 


தன் திறமைகளால் உலகை ஏற்றம் பெற வைப்பவள் ..!!


 தாயாய் பாசத்தை பொழிந்திடுவாள்..!!


தடைகளை உடைத்தும்  உயரே பறந்திடுவாள்..!!


 மனைவியாய் அன்பை பரிமாறிடுவாள்..!!


தோழியாய்  தக்க நேரத்தில் உறுதுணையாக இருப்பாள்..!!

 

அவள் பெண்மையான இதயம் கொண்டவள் தான்..!!


அதே நேரம்  இரும்பைப் போல் வலிமையான மனமும் கொண்டவள்..!!


பெண் என்பவள் வெறும் அழகு சிலை அல்ல..!!


அவள் ஒரு சாதனைப் பெண் ..!.அவள் ஒரு மகாசக்தி..!!


அவள் அறிவின் ஒளி..! அவள் வீட்டின் ஒளி விளக்கு ..!!


அவள் நாட்டின் நம்பிக்கை ..! அவள் தியாகத்தின் திருவுருவம்..!!


தென்றலும் புயலுமாகிய பெண்மையை போற்றுவோம்..!!






 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாடி என் வயிற்றுக்குள்ளே

சிறுகதை : #வாடி என் வயிற்றுக்குள்ளே..!! # எழுத்தாளர்: இரா.கலைச்செல்வி                       *****          அன்று வீடே  ஒரே பரபரப்பாய் இருந்த...