வெள்ளி, 5 செப்டம்பர், 2025

தாய் மண்ணே வணக்கம்

தாய் மண்ணே வணக்கம் 



படைப்பு :கவிஞர் இரா. கலைச்செல்வி


___


தாயின் கருணை பொழியும் தாய் மண்ணே ..!!

தன்னிகரற்ற உனக்கு அன்பு வணக்கங்கள்...!!


பரந்த   கடல்களை முப்புறமும் கொண்டவளே..!!

பசுமை போர்த்திய மலைகளை கொண்டவளே..!!


இயற்கை அன்னையின் எழில்  கொண்டவளே ..!!

இனிய பசும் வயல்வெளியை பரிசளித்தவளே.!!


துள்ளி விளையாடும் நதிகளை கொண்டவளே..!!

தூய  தென்றல் காற்றின் அமைதி  கொண்டவளே..,!!


வடக்கே இமயமும், தெற்கே குமரியும் கொண்டவளே..!!

பல்வேறு மொழிகள், பல்வேறு மதங்கள் கொண்டவளே..!!


வேற்றுமையில்  ஒற்றுமை காண்பவளே..!!

உன் மடியில்  பிறந்தோம், தவழ்ந்தோம் ,உயர்ந்தோம்...!!


பாரதத் தாயே உன் வளத்தால் வளர்ந்தோம்..!!

பாசக்கரம் நீட்டி  , நீ சீராட்டி ,பாராட்டி வளர்த்தாய் ..!!


திருவள்ளுவரும், பாரதியும், பாரதிதாசனும்,

அன்னை தெரசாவும்  ,பிறந்த புண்ணிய  பூமி நீ..!! 


புத்தரும், காந்தியும் பிறந்து வாழ்ந்த பூமி நீ!!

புண்ணிய நதிகளின் பிறப்பிடம் நீ..!!


பல்வேறு மக்கள், பல்வேறு இனங்கள் இருந்தும்,

பாரதமாதா நீ மட்டுமே எங்கள் தாய்..!!


இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்கிறோம்.

இனிய பாரதத்தினை  உலகஅரங்கில் உயர்த்துவோம்.


அன்பும் ,பண்பும்,  ஒற்றுமையும்  நிறைந்து...

அமைதியாய்  வாழ்ந்திடுவோம் உன் மடியில்..!!



முற்றும்.


கவிஞர் இரா. கலைச்செல்வி 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அம்மா என்ற ஜக்கம்மா

#அம்மா என்ற ஜக்கம்மா # ( ஒரு பக்க கதை) படைப்பு : எழுத்தாளர் இரா. கலைச்செல்வி               ******* அம்மா:  பூஜை அறையில் நின்று க...