#காலத்தின் குரல்#
ஆக்கம் : கவிஞர் இரா. கலைச்செல்வி ,சென்னை.
(கொரியா தமிழ் சங்கத்தால் நடத்தப்பட்ட உலகளாவிய கவிதை போட்டியில் வெற்றி பெற்ற கவிதை)
@@@@@
காலத்தின் குரலினை கூர்ந்து கேளுங்கள்..!!
முக்காலமும் உணர்ந்த முனிவர்கள் அக்காலத்தில் ..!!
முனிவர்களாய் முழுவேஷம் போடுவோர் இக்காலத்தில்..!!
மண்ணை உரமாக்கும் மண்புழுக்கள் அக்காலத்தில் ..!!
மண்ணை விஷமாக்கும் நெகிழிகள் இக்காலத்தில்..!!
குடும்பத்தில் பத்துக்குமேல் குழந்தைகள் அன்று..!!
குடும்பத்தில் குழந்தைக்கே வழியில்லை இன்று..!!
எங்கும் கருத்தடை மையங்கள் அன்று ..!!
எங்கும் கருத்தரிப்பு மையங்கள் இன்று..!!
தூயநீரும் , தூயகாற்றும் இலவசம் அன்று ..!!
இரண்டுக்கும் விலையோ விலை இன்று.!!
இயற்கையில் விளைந்த காய்கறிகள் அன்று..!!
இரசாயன கலப்பினக் காய்கறிகள் இன்று...!!
தெருவிற்கொரு தொலைபேசி சாவடி அன்று ..!!.
ஒவ்வொருவருக்கும் தனித்தனி அலைப்பேசிகள் இன்று..!!
உலகையே ஆளக்கூடியவள் பெண் தெய்வமாகினும் ..!!
பெண் தெய்வ கருவறையில் கூட...
பூசாரியாய் ஆள உரிமையுண்டோ பெண்ணிற்கு..?
பெண்ணுக்கு எதிர்ப்பாற்சொல் ஆண் என்றால் ..!!
பரத்தையர் , வேசி , விபச்சாரி..!! என்ற,
பெண்பால் சொல்லுக்கு எதிர்ப்பாற்சொல் உண்டோ..?
விதவை, வாழாவெட்டி , மலடி..!! என்ற ,
பெண்ணைக் குறிக்கும் அகராதிச் சொற்கள் ..!!
இவ்விஞ்ஞான யுகத்திலும் அகராதியில் இருந்து ,
இன்னமும் நீக்கப்படாதது ஏனோ..?
இந்த காலத்தின் குரல் கேட்கிறதா..??
இனி நல்லதே நடக்கும் அன்றோ..!!
*****
படைப்பு: இரா. கலைச்செல்வி, சென்னை.
(கொரிய தமிழ் சங்கத்தால் நடத்தப்பட்ட,, உலகளாவிய கவிதை போட்டியில் , வெற்றி பெற்ற முதல் 25 வெற்றி கவிதைகளில் இடம்பெற்றுள்ள கவிதை.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக