கவிதை: நாடே எனது வீடு
ஆக்கம் : இரா. கலைச்செல்வி
சென்னை
***
உலகிலே இனியது எனது நாடு !
உயரிய இமயமலை உடைய நாடு !
வளமான நதி ஓடுகிற திருநாடு !
பலவித மொழி பேசுகிற பழமையான நாடு.!
வாழுகிற தகுதியான எனது வீடு.!
இரா. கலைச்செல்வி
***
( நாடே எனது வீடு என்ற தலைப்பில் புள்ளியில்லா கோலங்கள் கவிதை.
கவிதை முழுவதும் மெய்யெழுத்துக்களே இருக்காது.
புள்ளி வைத்த எழுத்துக்களே இல்லாமல் எழுதுவது இதன் சிறப்பு கவிதையின் பல வடிவங்களில் இதுவும் ஒன்று)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக