சனி, 30 நவம்பர், 2024

*கலைஞருக்கு கவி வணக்கம்*



கலைஞரே... 

உன் நினைவு நாளில் ,

உனக்கு என் பணிவான 

கவி வணக்கம்..!!



                     *****


அஞ்சுகம் தந்த அறிவு சுரங்கமே ..!!

திருக்குவளை தந்த திருக்குறளே ..!!


தமிழகத்தின் தலைமகனே ..!!

தமிழ் தாயின் திருமகனே ..!!


தெற்கே உதித்த உதயசூரியனே ..!!

தென்னகத்து தங்க தமிழனே ..!!


திக்கட்டும் தமிழ் பரப்பிய ,

திகட்டாத காவியம் நீ ..!!


குறளுக்கு உரை எழுதி ,

குறளோவியம் தீட்டியவன் நீ ..!!


அறிஞர் அண்ணாவின் தம்பி நீ..!! 

அனைத்தும் அறிந்த ஞானி நீ ..!!



உன் சிரிப்பு என்றும் வாடாமல்லி ..!!

உன் பேச்சு என்றும் மங்கா  வெள்ளி ..!!


உன் கடிதம் ஒரு காவியம் ..!!

உன் வசனம் ஒப்பில்லா வாழ்க்கை தத்துவம் ..!!


தமிழ் மொழி  காத்த தலைவா ..!!

சமத்துவ சமுதாயம் சாதித்த சாணக்கியா..!!


"என் உயிரினும் மேலான 

என் அன்பு உடன்பிறப்புகளே"


என்ற உன் அந்த அன்பு குரல் ,

எங்கள் உயிரில் கலந்த உணர்வாயிற்று..!!


கிழக்கே சூரியன் உதிக்கும் வரை ,

உன் புகழ்  ஓங்கும்..!!


நன்றி. வணக்கம்.



கவிதை படைப்பு :

கவிஞர்  ‌‌இரா. கலைச்செல்வி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாடி என் வயிற்றுக்குள்ளே

சிறுகதை : #வாடி என் வயிற்றுக்குள்ளே..!! # எழுத்தாளர்: இரா.கலைச்செல்வி                       *****          அன்று வீடே  ஒரே பரபரப்பாய் இருந்த...