கவிதை படைப்பு :இரா. கலைச்செல்வி
🌳தாங்குமா.. நம் தமிழகம்..?🌳
எங்கும் பசுமை அன்று..!!
எங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் இன்று..!!
மண்ணுக்குள் மண்புழுக்கள் அன்று..!!
மண்ணுக்குள் மக்கா நெகிழிகள் இன்று ..!!
மக்கும் குப்பைகள் உரம் ஆயின அன்று..!!
மக்கா குப்பைகள் விஷமாகின்றன இன்று..!!
பறந்தன பறவைகள் அன்று..!!
பறக்கின்றன நெகிழிகள் இன்று ..!!
பசுமையான வாழை இலை சாப்பாடு அன்று..!!
பச்சை நிற பிளாஸ்டிக் இலை சாப்பாடு இன்று..!!
பெரிய துணிப்பையோடு கடைக்கு செல்வர் அன்று..!!
வெறும் கையோடு சென்றவர்கள்..!!
நெகிழி பைகளோடு திரும்புவர் இன்று..!!
வீட்டுக்கு வந்தவுடன் பத்திரமாய் ...
வீட்டுக்குள் இருக்கும் துணிப்பை அன்று..!!
வீட்டுக்கு வந்தவுடன் குப்பையோடு ...
வீண் குப்பையாய் நெகிழிப் பைகள் இன்று..!!
எத்தனை கோடி மனிதர்கள்..!!!
எத்தனை கோடி குடும்பங்கள்..!!!
எத்தனை கோடி நெகிழிப் பைகள்..!!!
தாங்குமா ...இந்த உலகம் ?
தாங்குமா... நம் தமிழகம்.?
என் நெஞ்சுக்குள் பல வலிகள்..!!!
என்பதால் சொல்கிறேன் இவ்வரிகள்..!!!
***கவிதை ஆக்கம்:
இரா.கலைச்செல்வி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக