@@@@@
படைப்பு இரா. கலைச்செல்வி
நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க..!!!
அகிம்சைவழியில் போராடி போராடி,
காந்திஜியின் கால்கள் தேய்ந்தன..!!!
புரட்சி கவிதைகள் எழுதி எழுதி ,
பாரதியின் கைகள் தேய்ந்தன..!!!
ஆங்கிலேயரிடம் அடி உதை வாங்கி வாங்கி ,
கொடிகாத்த குமரனின் கைகள் மரத்து போயின..!!!
செக்கிழுத்து செக்கிழுத்து சிதம்பரனாரின் இடுப்பு ஓடிந்து போயின.!!!
நம் வீரர்களை தூக்கிலிட்டு தூக்கிலிட்டு,
ஆங்கிலேயரின் கயிறு தேய்ந்து போயின..!!!
ஜான்சிராணி லெட்சுமிபாயின்
வீரத்திற்கும் ..!!!
வீரமங்கை வேலுநாச்சியாரின்
தைரியத்திற்கும்..!!!
மருது சகோதரர்களின் போர் திறமைக்கும்..!!!
வீரபாண்டிய கட்டபொம்மனின் துணிச்சலுக்கும்..!!!
தீரன் சின்னமலையின் அடங்காத ஆவேசத்திற்கும், நிகர் உண்டோ..!!!
இவர்கள் செய்த தியாகங்கள்,
இழப்புகள் ,கொஞ்சமா நஞ்சமா..???
அனைவரின் தியாகத்தால் விளைந்த சுதந்திரத்தை, என்றும் பேணி காப்போம்..!!!
*****
இரா. கலைச்செல்வி,
மேனாள் அரசு உயர் அதிகாரி.
சிறுகதை எழுத்தாளர்.
கவிஞர், சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக