செவ்வாய், 28 ஜனவரி, 2025

எங்கே போனாயோ..??

கவிதை : ‌ ஆக்கம் இரா. கலைச்செல்வி 

 எங்கே போனாயோ ?

           ***
அன்று,
வயலில் உழைத்து களைத்து ..!!
வந்து அமர்ந்த உழவனுக்கு ..!!

படர்ந்த புங்கமரத்தடியின் கீழ்..!! 
 பட்டப்பகல் உச்சி வெயிலில்..!!

கண்முன்னே கஞ்சிக் கலயம்..!!
கப கப பசியில் அதுவே தேவாமிர்தம்..!!

கடித்துக் கொள்ள  சிறுவெங்காயம் ..!!
ருசித்துக் கொள்ள மோர் மிளகாய் ..!!

உடல் உறுதியாய் இருந்தது. 
உடம்பினை நோயின்றி காத்தது.

இன்று,
அரை நூற்றாண்டுக்குப் பிறகு,
ஆஸ்பத்திரியில் நீ நுழைந்துள்ளாய். 

அழகிய ஐந்து நட்சத்திர ஹோட்டலின்,
அன்றாட  உணவு பட்டியலில் ,

முதலில் அமர்ந்துள்ள நீ..!!
மூத்த தமிழ்குடியின்  குடும்பங்களின்,

உணவு  பட்டியலில் இருந்து..
உயரே பறந்து எங்கே  போனாயோ..!!

வந்துவிடு .வந்துவிடு..!!
வாழ்வை வளமாக்க எங்களிடம் வந்துவிடு..!!



ஆக்கம் இரா. கலைச்செல்வி, சென்னை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நவசமாஜ் மகளிர் மேடையின் சாதனை பெண் விருது வழங்கும் விழாவில் ஒரு விருது பெற்ற ஒரு மாணவியின் தந்தையின் கருத்து.

காலை வணக்கம் மேடம் 27/6/2026 வரலாற்று சிறப்புமிக்க அண்ணா நூற்றாண்டு நூலகம் சென்னையில் நவ சமாஜ் சேரிட்டபிள் சொசைட்டியின் மகளிர் மேடை சாதனை பெ...