புதன், 29 ஜனவரி, 2025

#என்னுயிர் அம்மா#

கவிதை   #என்னுயிர் அம்மா#


எழுதியவர்: இரா. கலைச்செல்வி 



                   ***


உன் உயிர் கொடுத்து..!!

என் உயிர் தந்தவளே..!!


உன்   உதிரத்தை..!!

உணவாக்கி தந்தவளே..!!


உலகின் மிக சுகமான வீடு ..!!

உன் கருவறை மட்டுமே..!!!


உலகின் மிகப் பெரிய சக்தி..!!

உன் அன்பு மட்டுமே..!!!


உலகின் எந்த பரிசும்..!!

உன் ஆசை முத்தத்திற்கு ஈடாகுமோ..?


நான் மறக்கவே முடியாத ,

நான் பார்த்த முதல் ஓவியம் நீ..!!!

நான் கேட்ட முதல் இசை உன் குரல்..!!


என் நலம் விரும்பும் ,

என் ஒரே  ஜீவன்  நீயே..!!

எனைக் காத்த கடவுளும் நீயே..!!


நீ உடுத்திய  பருத்தி சேலையில்...!!

நீ எனக்கு கட்டிய தொட்டிலுக்கு..!!

நிகரான மாளிகை உண்டோ...?


உன் பருத்தி சேலை விரிப்பு மட்டுமே..!!

என் சுகமான பஞ்சு பெத்தை..!!


என் எல்லா கவலைகளும் ,

என்றும் பறந்து போகும்..!!


உன் சேலையை முகர்ந்து ,

உணர்ந்த அந்த நொடியில்..!!


நீ இவ்வுலகில் இல்லாத போது ,

என் ஒரே ஆறுதல்...!!!


நீ    விட்டுச் சென்ற  "அந்த"

உன்  சேலை மட்டுமே...!!!


உன் வாசம்..!! உன் உயிர்..!!

உன்  அந்த சேலைக்குள்ளே...!!


       இரா.கலைச்செல்வி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாடி என் வயிற்றுக்குள்ளே

சிறுகதை : #வாடி என் வயிற்றுக்குள்ளே..!! # எழுத்தாளர்: இரா.கலைச்செல்வி                       *****          அன்று வீடே  ஒரே பரபரப்பாய் இருந்த...