புதன், 29 ஜனவரி, 2025

#காலத்தின் குரல்#

#காலத்தின் குரல்# (அன்றும்  இன்றும்)

கவிஞாயிறு  இரா. கலைச்செல்வி ,

                

         

                          @@@@@


காலத்தின் குரலினை  கூர்ந்து கேளுங்கள்..!!


முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்  அன்று.!!

முனிவர்களாய் முழுவேஷம் போடுவோர் இன்று..!!


மண்ணை  உரமாக்கும்  மண்புழுக்கள் அன்று..!!

மண்ணை  விஷமாக்கும்  நெகிழிகள் இன்று..!!


குடும்பத்தில் பத்துக்குமேல் குழந்தைகள் அன்று..!!

குடும்பத்தில் குழந்தைக்கே வழியில்லை இன்று..!!


எங்கும் கருத்தடை மையங்கள் அன்று ..!!

எங்கும்   கருத்தரிப்பு மையங்கள் இன்று..!!


தூயநீரும் ,  தூயகாற்றும் இலவசம் அன்று ..!!

இரண்டுக்கும் விலையோ விலை  இன்று.!!


இயற்கையில் விளைந்த காய்கறிகள்  அன்று..!!

இரசாயன  கலப்பினக்  காய்கறிகளே  இன்று...!!


தெருவிற்கு  ஒரு தொலைபேசி சாவடி அன்று ..!!.

ஒருவருக்கு ஒரு  அலைப்பேசி இன்று..!!


அன்றும்..இன்றும்.. இத்துணை மாற்றங்கள்..!!

ஆனால் இன்றும் , இவ்வுலகில்...


பெண் தெய்வமானாலும் அவள் கருவறையில்..!!

பெண்ணிற்கு பூசாரியாய் ஆள உரிமையுண்டோ..?


அன்றில் இருந்து  , இன்று வரை ,

"பரத்தையர் ,வேசி , விபச்சாரி..!! " என்ற,

பெண்பால் சொல்லுக்கு எதிர்ப்பாற்சொல் 

உலக அகராதியில் உண்டோ..?


அன்றில் இருந்து, இன்று வரை

"விதவை, வாழாவெட்டி , மலடி..!! "என்ற ,

பெண்ணைக் குறிக்கும் அகராதிச் சொற்கள் ..!!


நவீன யுகத்திலும்  "அறத்தமிழ் " அகராதியில் ,

நீக்கப்படாதது   ஏனோ..?


இந்த காலத்தின்  குரல்  கேட்கிறதா..??

இனி நல்லதே  நடக்கும் அன்றோ..!!

      

            ‌‌*****


கவிஞர் .இரா. கலைச்செல்வி, சென்னை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாடி என் வயிற்றுக்குள்ளே

சிறுகதை : #வாடி என் வயிற்றுக்குள்ளே..!! # எழுத்தாளர்: இரா.கலைச்செல்வி                       *****          அன்று வீடே  ஒரே பரபரப்பாய் இருந்த...